Monday 29 August 2011

புனித ஆட்ரியன் (St. Adrian)


புனித ஆட்ரியன். 

இராணுவ வீரர்களுக்கான பாதுகாவலர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.290-ம் ஆண்டு. இவரது நினைவுத் திருவிழா செப்டம்பர் மாதம் 8-ம் தேதி.  இவர் இரும்புக்கொல்லர் மேடையில் வைத்து கைகள் வெட்டப்பட்டு, பின்னர் தலை துண்டிக்கப்பட்டு இயேசுவுக்காகக் கொல்லப்பட்டார்.

புனித வனத்து அந்தோணியார் (St. Anthony the Abbot)



புனித வனத்து அந்தோணியார். விலங்கினங்களின் பாதுகாவலர். வனாந்தரத்தில் தனிமையில் செபித்து வாழ்ந்த எளிய துறவி. இவரது நினைவுத் திருவிழா சனவரி மாதம் 17-ம் தேதி, கி.பி.356-ம் ஆண்டு காலமானார்.


புனித புளோரியன்( St.Florian)


புனித புளோரியன்.

தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாவலர், இவர் கி.பி.300-ம் ஆண்டில் வாழ்ந்தவர், இவரது நினைவுத் திருழா மே மாதம் 4-ம் தேதி. இயேசுவுக்காக சித்தரவதை பட்டு இறந்தார்.

Sunday 28 August 2011

புனித இசிதோர் (St. Isidore of Seville)


புனித இசிதோர். தற்கால கம்ப்யூட்டர், மற்றும் இன்டர்நெட் போன்றவைகளுக்கு பாதுகாவலராக உள்ளவர். இவரின் நினைவுத்திருநாள் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி. கி.பி.636 ஏப்ரல் மாதம் 4-ம் தேதி இவை காலமானார்.


புனித ரபேல் அதிதூதர் (St. Raphael the Archangel)


புனித ரபேல் அதிதூதர் இறைவனின் தலைமை தூதர்களில் மூவரில் ஒருவர். இவர் நோய்களிலிருந்து குணமடைவதற்க்கான பாதுகாவலராக திகழ்கிறார்.
இவருடைய நினைவு / திருவிழா செப்டம்பெர் 29-ம் தேதி.

புனித அன்னம்மாள் (St. Anna)


புனித அன்னம்மாள். 
இறைவனின் தாயான அன்னை மரியாளின் தாயாராவார். இறைவனின் அன்னையை தன் வயிற்றில் சுமக்கும் பேறுபெற்றவர். இவர் அன்னையர்களுக்கும், குடும்பத்திற்கும் பாதுகாவலராக இருக்கிறார். இவரது திருவிழா ஜூலை மாதம் 26-ம் தேதி இவர் நினைவாக கொண்டாடப்படுகிறது.


புனித. பதுவை அந்தோணியார் (St. Anthoni of Paduva)


கோடி அற்புதர் என புகழப்படும் புனித. பதுவை அந்தோணியார். அற்புத அடையாளங்களுக்கான பாதுகாவலராகவும், இளஞ்சிறார்களுக்கான பாதுகாவலராகவும் உள்ளார். இவரது திருவிழா ஜூன் மாதம் 30-ம் தேதி உலகமெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவர் கி.பி.1231-ல் இறைவனடி சேர்ந்தார்.

சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு பார்வைக்கு வைக்கப்பட்ட புனித. பதுவை அந்தோணியாரின் திருவுடல்.


 புனித. பதுவை அந்தோணியாரின் திருவுடல். அழியாத நாக்கு.

புனித வாலன்டைன் (St.Valentine)



புனித வாலன்டைன். அன்பிற்கும், நட்பிற்கும் பாதுகாவலர். இவரது நினைவுத் திருநாள் பிப்ரவரி 14-ம் தேதி.


புனித. பேதுரு (இராயப்பர்) (St. Peter)


புனித. பேதுரு (இராயப்பர்) இயேசுவின் முதன்மை சீடர், இயேசுவிற்கு பின் திருச்சபைக்கு தலைமை வகித்தவர்.
மனித வாழ்விற்கும், மீனவர்களுக்கும் பாது காவலராக திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கி.பி. 64-ம் ஆண்டு உரோமை ஆட்சியாளர்களால் தலைகீழாக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.


புனித கிறிஸ்டோபர் ( St. Christopher)

புனித கிறிஸ்டோபர். பயணங்களுக்கும், உடல் பலத்துக்கும், பாதுகாவலர்.
இவருடைய திருவிழா ஜூலை 25 ம் தேதி.
இவர் கி.பி.250-ல் தலை வெட்டப்பட்டு இறைவனுக்காக உயிர் நீத்தவர்.